Friday, November 15, 2013

கீழக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் பிணம்!

பலரின் உதவியுடன் எடுத்து வரப்படும் உடல்




கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன்(30) இவர்  கீழக்கரை சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது.

இது குறித்து அவரது அண்ணன் ஞான முருகன்(36) காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார் 

இறந்து போன தியாகராஜன் மகன் ராஜா ஜெகதீஷன் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்து அதே ஊரில் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்  கீழக்கரைக்கு வந்தவர் மீண்டும் திரும்பி செல்லவில்லை .இந்நிலையில் அவரது மாமியார் நேற்று மருமகனிடம் சமாதனம் பேசி அழைத்தற்கு இவர் வர  முடியாது என மறுத்து  விட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது . குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு . இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.