Monday, October 7, 2013

துபாயில் பிரிவு உபசார நிகழ்ச்சி!


20ஆண்டு காலம் பணிபுரிந்து நிறைவு செய்து துபாயிலிந்து தாயகம் திரும்பும் டாக்டர் அஹமது முஹைதீனுக்கு ஈமான் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது
ஈமான் அமைப்பின் கல்விக்குழு துணை தலைவர் கீழக்கரை  பி.எஸ்.எம்.ஹபீபுல்லாஹ்
 டாக்டர் அஹ்மது முஹைதீன்



எம்பிஎம் பொது மேலாளர் சாஹுல் ஹமீதுக்கு ஈமான் பொது செயலாளர் லியாக்கத் அலி சால்வை போர்த்தினார்

துபாயில் அமீரக தமிழ் மன்றத்தின் நிர்வாகியும் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் இன் ஜினியராக பணியில் சேர்ந்து பொது மேலாளராக பதவி உயர்வு பெற்று 20 ஆண்டு காலமாக பணியை நிறைவு செய்து தாயகம் திரும்பும் டாக்டர் அஹமது முஹைதீனுக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

அரேபியன் ஹோல்டிங் நிறுவனரும் ,ஈமான் அமைப்பின் கல்விக்குழு துணை தலைவருமான கீழக்கரை பி.எஸ்.எம் ஹபிபுல்லா தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜமால் கிராஅத் ஓதினார்.முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் கல்விக்குழு துணை தலைவர் பி.எஸ்,எம் ஹபீபுல்லா ஈமான அமைப்பின் பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி,துணை பொது செயலாளர் தாஹா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஈடிஏ எம் பி எம் பொது மேலாளர் சாஹுல் ஹமீது, அஸ்கான் துனை பொது மேலாளர் பலீல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
டாக்டர் அஹமது முஹைதீன் ஏற்புரையில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

ஈமான் அமைப்பின் வெல்பேர் செயலாளர் பைசுர் ரஹ்மான் நன்றி கூறினார்.ஈமான் அமைப்பில் விழாக்குழு செயலாளர் யாசின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.