Monday, April 22, 2013

கீழ‌க்க‌ரையில் வ‌ள்ளல் சீத‌க்காதி ம‌ணிம‌ண்ட‌ப‌ம் அமைக்க‌ கோரிக்கை!

ப‌ட‌ விள‌க்க‌ம்:‍கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ச‌முதாய‌ புர‌வல‌ர் ஹ‌ச்.எஸ்.அப்துல் காத‌ரை கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் சார்பாக‌ த‌ங்க‌ம் ராத‌கிருஸ்ண‌ன் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் ச‌ந்தித்த‌ன‌ர்

கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாள‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன் ம‌ற்றும் நிர்வாகிக‌ள் கீழ‌க்க‌ரையில் முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை ச‌ந்தித்து ஊர் ந‌ல‌ன்,சமூக‌ ஒற்றுமையை மேம்ப‌டுத்துவ‌து குறித்து ஆலோச‌னை ந‌ட‌த்தின‌ர்.மேலும் கீழ‌க்க‌ரையில் வ‌ள்ளல் சீத‌க்காதி ம‌ணிம‌ண்ட‌ப‌ம் அமைப்ப‌த‌ற்கு வேண்டிய‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும் என‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ளை கேட்டு கொண்ட‌ன‌ர்.இச்ச‌ந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐயை சேர்ந்த‌ முஜீப் உள்ளிட்டோர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.

மேலும் இது குறித்து த‌ங்க‌ம் ராத‌கிருஸ்ண‌ன் கூறியதாவ‌து,

கீழக்கரையில் செத்தும் கொடை கொடுத்தவர் என படிக்காசு புலவரால் போற்றப்பட்ட   வள்ளல் சீதக்காதி மரைக்காருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் .இது குறித்து ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ப‌ல‌ த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்து வ‌ருகின்ற‌ன்றன‌ர்.த‌ற்போதைய‌ அர‌சாங்க‌ம் இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாவும் இத‌ற்காக‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரிட‌ம் வ‌லியுறுத்த‌ வேண்டும் என்றார்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.