Monday, November 12, 2012

கீழ‌க்க‌ரையில் மின் க‌ம்பிக‌ளை திருடியதாக‌ 3 பேர் கைது!




கீழ‌க்க‌ரையில் தொட‌ர்ந்து மின்க‌ம்பிக‌ள் திருட்டு ந‌டைபெற்று கொண்டிருந்தது.திருட்டு தொட‌ர்பாக‌ இன்று 3 பேரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

இது குறித்து போலீசார் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவதாவது,

 இன்று காலையில் கீழ‌க்க‌ரையிலிருந்து ராமநாத‌புர‌ம் செல்லும் ஈ சி ஆர் சாலையில் காஞ்சிர‌ங்குடி அருகில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் த‌லைமையில் எஸ்.ஐ.க்க‌ள் செல்லம‌ணி,கோபால் காவ‌ல‌ர்க‌ள் ராஜேஷ்,முனிய‌சாமி ம‌ற்றும் த‌னிப்பிரிவு ஏட்டு செல்வ‌ராஜ் ஆகியோர் வாக‌ன‌ சோத‌னையில் ஈடுப‌ட்டிருந்த‌ போது ராம‌நாத‌புர‌ம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பால‌முருக‌ன் என்ற‌ வவ்வால் குட்டி(23) ,அமீன் என்ற‌ அமீன் சர்தார்(22), இன்சாமுல்  ஹக்(22)ஆகியோர் மீது ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட்ட‌தால் போலீசார் அவ‌ர்க‌ளை நிறுத்தி விசார‌ணை செய்து வாக‌ன‌த்தை சோத‌னை செய்த‌தில் மின் கம்பிகளை உருக்கி காப்பராக‌ வைத்திருந்த‌ன‌ர்.
இவ‌ர்க‌ளை தொடர்ந்து விசார‌ணை செய்த‌தில்  மின்கம்பிக‌ளை திருடி விற்ற‌தாக‌வும் மீத‌முள்ள‌வ‌ற்றை ராம‌நாத‌புர‌த்தில் விற்ப‌னை செய்ய‌ செல்வ‌தாக‌வும் கூறின‌ர். இதை தொட‌ர்ந்து மூவ‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ளிட‌மிருந்த‌ 45 கிலோ காப்ப‌ரை ப‌றிமுத‌ல் செய்த‌ன‌ர்.
போலீசார் தொட‌ர்ந்து விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.