Sunday, December 25, 2011

கீழக்கரை கடற்கரையில் திடீர் சுவைமிகு குடிநீர் ஊற்று! ஏராளமானோர் குவிந்தனர்.





கீழக்கரை மீனவர் குடியிருப்பு பகுதி கடற்கரையில் இன்று காலை திடீர் என்று சிறிய அளவில் நல்ல தண்ணீர் ஊற்று உருவாகியது.அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மிகுந்த சுவையுடன் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தோர் கூறினர். தொடர்ந்து ஊற்றிலிருந்து தண்ணீர் சுரந்து வருகிறது.

உப்பு கரிக்கும் கடல் தண்ணீர் அருகே நல்ல தண்ணீர் கிடைத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியபடவைத்தது. இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஊற்று தண்ணீரை பருகியும் ,குடங்களில் வீடுகளுக்கும் எடுத்து சென்றனர்..

அப்ப‌குதியை சேர்ந்தோர் கூறிய‌தாவ‌து,
கீழக்கரை ஒரு குடம் தண்ணீர் ரூ 5 க்கு மேல் விற்கும் நிலையில் இது போல் பல இடங்களில் நீர் ஊற்று உருவாகினால் மகிழ்ச்சியாக இருக்கும் மேலும் இந்த ஊற்று தண்ணீர் தொடர்ந்து சுரந்தால் மிகவும் உதவியாக இருக்கும் .இப்பகுதியில் ந‌ல்ல‌ த‌ண்ணீர் சுர‌ப்ப‌து இதுவே முத‌ல் முறை இப்பகுதி கடலில் சுனாமிக்கு பிற‌கு ப‌ல்வேறு மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்ந்து வ‌ருகிற‌து. க‌ட‌ல் நிற‌ மாற்ற‌ம்,உள்வாங்குவ‌து போன்ற‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்தேறிய‌து. என‌வே இப்ப‌குதியில் க‌ட‌ல் சார்ந்த‌ ஆய்வுக‌ள் மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ன‌ர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.