Tuesday, March 29, 2011

கீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்! ஊழியர் கூட்டத்தில் வேட்பாளர் அசன் அலி பேச்சு



கீழக்கரையில் திமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அசன் அலி அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பசீர் அகமது, மண்ணின் மைந்தன் அசன் அலியை வெற்றி பெற செய்வேம் என்றார்.

வேட்பாளர் அசன் அலி பேசியதாவது, கீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன். மேலும் சிறுபாண்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவா? சிறுபாண்மையினருக்கு இட ஒதிக்கீடு செய்த கலைஞரா? யார் ஆட்சி வேண்டும் என்பதை நாம் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள புகழ் பெற்ற மரகத சிலையை கண்டெடுத்து ஒப்படைதது கீழக்கரையை தண்டையார் தெருவை சேர்ந்த அப்துல் ரஹமான் என்பவர்தான் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அந்த அளவிற்க்கு இப்பகுதியில் சமூக நல்லிணக்கம் நிலவி வருகிறது அது தொடர ,மீண்டும் கலைஞர் ஆட்சி வர திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஹசனுதீன், மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ரவிசந்திர ராமவன்னி,கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீது கான்,திமுக நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராகிம்(ராஜா) ,பொருளாளார் ஜகுபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.